சுகாதார விழிப்புணர்வு நாடகம்

பந்தலூர், பிப். 21: நெல்லியாளம் நகராட்சி சார்பில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு  நாடகம் நடைபெற்றது. நெல்லியலாம் நகராட்சி சார்பில் நேற்று முன்தினம் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நாடகம் பந்தலூர் பஜார், தேவாலா பஜார், நாடுகாணி பஜார் ஆகிய பகுதிகளில்  நடைபெற்றது. இதில் திடக்கழிவு மேலாண்மை, டெங்கு ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, வீட்டுக்கு ஒரு கழிவறை, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் பாலகுமார், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பிரகாஷ் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: