சோமனூர்,பிப்.21: சோமனூர் உள்ள கருமத்தம்பட்டி பேரூராட்சி 15வது வார்டு செந்தில் 1 நகரில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 1 கோடியில் தார்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கிய தார் சாலை போடும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் போக்குவரத்துக்காக தொடங்கப்பட்டது.ஊஞ்சப்பாளையம் பிரிவிலிருந்து செந்தில்நகர் ஒட்டன்தோட்டம் வரையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட தார்சாலை, தற்போது சாக்கடை கால்வாயில் தேங்கிக்கிடந்த சாக்கடை கழிவுகளை சாலையில் மலைபோல் குவித்துள்ளனர்.