மயிலாடுதுறை,பிப்.21: சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திருப்ப பெற வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் மாலிக் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட துணை செயலாளர்கள் ஜெஹபர் அலி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சங்கை தாஜ்தீன் வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில அவைத்தலைவர் நாசர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) என்பது மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. இது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும், சர்வதேச ஒப்பந்தத்திற்கும் எதிரானது.