கலெக்டர் அழைப்பு புதுச்சேரி கவர்னர் மக்களின் குறைகேட்பு நிகழ்ச்சி

காரைக்கால், பிப்.21: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காணொளி மூலம் மக்கள் குறைகளை இன்று (21ம் தேதி) கேட்கவுள்ளதால், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா அறிவித்துள்ளார்.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். அதேபோல், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொளி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது.

இன்று (21ம் தேதி) மாலை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், காலை 10 முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில், புகார்களை எழுத்து வடிவில் கொண்டுவந்து முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.சீா்காழி அருகேசீர்காழி, பிப்.21: சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான அல்லிமாமலராள் தாயாா் சமேத செம்பொன்னரங்கா் பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி, செம்பொன்னரங்கருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, தீபவழிபாடு நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ரகுநாதன், நரசிம்மன், அா்ச்சகா் ரமணி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories: