குமரி மாவட்டத்திற்கு புதிய வன அலுவலர்

நாகர்கோவில், பிப்.21: குமரி மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்த ஆனந்த், மதுரை மாவட்ட வன அலுவலராக மாற்றப்பட்டார். அவர் மதுரை சென்று பொறுப்பேற்றுக்கொண்டார். குமரி மாவட்ட வன அலுவலராக ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் குமரி மாவட்ட வன அலுவலராக பொறுப்பேற்க உள்ளார்.

Related Stories: