பாடாலூர், பிப் 20: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக மூதாட்டி அரளி விதையை அரைத்துக் குடித்து இறந்தார்.
ஆலத்தூர் தாலுகா கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மனைவி செல்லம் (73). குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் இரவு செல்லம் அரளி விதையை அரைத்துக் குடித்து இறந்தார். தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்த இளம்பெண் பாடாலூர், பிப் 20: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளம்பெண் விஷம் குடித்தார்.