நாமகிரிப்பேட்டையில் சிதிலமடைந்த வடுகம் சாலை

நாமகிரிப்பேட்டை, பிப்.20:  சிதிலமடைந்து காணப்படும் வடுகம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமகிரிப்பேட்டை அடுத்த வடுகத்தில் இருந்து சீராப்பள்ளி செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டு, குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகண ஓட்டிகளும் பள்ளிக்கு செல்லும் செல்லும் மாணவ-மாணவியர்களும் நேரத்திக்கு செல்ல முடிவதில்லை, மேலும் அவசர நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சென்று வரவும் மிகவும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த சாலை அமைத்து பல ஆண்டுகளாகிறது. சாலையை சரியாக பராமரிப்பு செய்யாததால் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, குண்டும் குழியுமாக உள்ள சாலையை சாலையை சீரமைக்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: