ராசிபுரத்தில் குடிநீர் விநியோகம் இன்று நிறுத்தம்

ராசிபுரம், பிப்.20: ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பொ) நடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், தினசரி குடிநீர் பெறப்பட்டு விநியோகம் செய்யபட்டு வருகிறது. இந்நிலையில், இடைப்பாடியில் இருந்து வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை குடிநீர் வடிகால் வாரியத்தினர் மூலம் சரி செய்யும் பணி இன்று நடக்கிறது. இதனால் ராசிபுரம் நகராட்சி பகுதியில் இன்று (20ம்தேதி) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: