சேலம், பிப்.20: சேலம் மாவட்ட விவசாயிகள் மத்திய அரசு வழங்கும் கவுரவ நிதி பெறுஞும் பயனாளிகள் அனைவருக்கும் விவசாய கடன் அட்டை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் விவசாயக் கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் கிராமங்கள் வாரியாக வரும் 25ம் தேதி வரை வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை மற்றும் வங்கித் துறை அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. விவசாய கடன் அட்டை மூலம் விவசாயம் செய்வதற்கு ₹1.60 இலட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் வேளாண் இடுபொருட்களான விதைதள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்கவும் மற்றும் உற்பத்திக்குத் தேவையான நிதி உதவி பெறவும் முடியும். மேலும், இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வேளாண் சார்ந்த மற்றும் சாராத தொழில்களுக்கு முதலீடு செய்யவும் கடன் பெறலாம். இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து கிராமங்களிலும் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் தினமும் காலை 10.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.