நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

நாமக்கல், பிப்.20: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நடைபெற்றது. இதில், முன்னாள் தேர்தல் பணிக்குழுசெயலாளர் பார் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த தினமான மார்ச் 1ம் தேதி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்படும். ஒன்றியம், நகரம், பேரூர்களில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, நகராட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசாமி, பொன்னுசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராமலிங்கம், விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், பவித்திரம் கண்ணன், பொதுக்குழுஉறுப்பினர்கள் டாக்டர் மாயவன், சுப்ரமணியம், வனிதாசெங்கோட்டையன், ராணி, நக்கீரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெகநாதன், அசோக்குமார், கௌதம், பழனிவேல், துரை ராமசாமி, பாலசுப்ரமணியம், நவலடி, செந்தில்முருகன், நகர செயலாளர்கள் சங்கர், ஆனந்த், முன்னாள் நகர பொறுப்பாளர் மணிமாறன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், கைலாசம், மீனவர் அணி சுகுமார், வழக்கறிஞர் அணி அறிவழகன், இளைஞர் அணி துணைஅமைப்பாளர்கள் கதிர்வேல், காந்தி, ஆனந்தகுமார் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: