ஆத்தூர், பிப்.20: ஆத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் இருத்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. ஆத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் கடைக்காரர்கள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பலரும் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வந்தனர். இதனால், நகர பகுதியில் போக்குவரத்து மிகுந்த நெரிசல் ஏற்பட்டு வந்தது. நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும், அதிக அளவிலான பகுதிகளை ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் மற்றும் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்கள் சாலையில் நடக்கவும், வாகனங்கள் செல்வதிலும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்பினரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை தொடர்ந்து அளித்து வந்தனர். இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களையும் போக்குவரத்து இடையூறாக ஆக்கிரமித்து கடைகள் மற்றும் கூரைகள் அமைத்துள்ளவர்கள் அதனை அகற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.