அருவங்காடு அரசு பள்ளியில் உ.வே.சா. பிறந்தநாள் விழா

பள்ளிபாளையம், பிப்.20: அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கி பேசினார். தாய் தமிழ் தொலைக்காட்சி இயக்குனர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்தாத்தா உவேசா தமிழ் மொழிக்காக ஆற்றிய சேவை குறித்து கண்ணகி நாடகம், பாடல், நடனம், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளிபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்யா பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் விடியல் அமைப்பின் தலைவர் பிரகாஷ், ஆசிரியர்கள் நாகராஜ், கிருத்திகா, விஜய், கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: