தர்மபுரி, பிப்.20: தர்மபுரி அருகே, இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளந்து தராததால், பயனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம், சோகத்தூர் ஊராட்சி ஆட்டுக்காரம்பட்டியில், தனியார் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்தி, ஆதிதிராவிடர் இன மக்கள் 115 பேருக்கு, கடந்த 1998ம் ஆண்டு இலவச பட்டா வழங்கியது. இந்நிலையில் நேற்று, தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தில், பயனாளிகள் ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த தாசில்தார் சுகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்