பெரம்பலூர், பிப்.19: பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிய ருக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி. டிஆர்ஓ தொடங்கி வைத்தார். பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பெரம்பலூர் மாவட்ட வே லைவாய்ப்புத் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, வாழ்க்கைக்கு வழிகாட்டி நெறிமு றைகள் எடுத்துச் சொல்லுதல், அவர்கள் தனது படிப்பு முடிந்ததும் தன் வாழ்க்கை முறையை எவ்வாறு அமைத்துக் கொண்டால் முன்னே ற்றம் அடையலாம் என்றும், பள்ளிப்படிப்பு முடிந்ததும் மேற்படிப்பு என்னபடிப்பு படித்தால், எதிர்கால வாழ்க்கைக்கு அதுபயனுள்ளதாக இருக்கும் என்பதையும் விளக்குவதற்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்தப் பயிற்சிக்கான தொடக்க விழாவிற்கு பெரம்பலூர் மாவட்டவருவாய் அலு வலர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலர் முரளிதரன் வர வேற்றார். பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோ ர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் விஜயன் முன்னிலை வகித்தார்.