அம்மிக்கல்லால் மனைவியை தாக்கிய கணவன் கைது

தாம்பரம், ஜன 29: தாம்பரம் அடுத்த முடிச்சூர், லட்சுமி நகர், நேதாஜி 1வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவரது மனைவி வனஜா (54). இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார். ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு வழக்கம்போல ராஜேந்திரன் போதையில் வீடு திரும்பினார். அப்போது, மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், வீட்டில் இருந்த அம்மிக்கல்லால், வனஜாவின் தலை மற்றும் மார்பில் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த வனஜா தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று மாலை ராஜேந்திரனை கைது செய்தனர்.

Related Stories: