பெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் பேரணி

பெரும்புதூர், ஜன. 29: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டன.

இந்நிலையில் பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பைக் பேரணி நேற்று நடந்தது. பேரணிக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முகுந்தன் தலைமை வகித்தார்.

பெரும்புதூர் ஆர்டிஓ சுதாகர், பெரும்புதூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியில் பைக்கில் ஹெல்மெட் அணிந்தும், காரில் சீட்பெல்ட் அணிந்தும் சென்றனர்.

ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி தேசிய நெடுஞ்சாலை வழியாக பேரணியாக சென்று பின்னர் பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது.

Related Stories: