காஞ்சிபுரம், ஜன.29: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி மையம் இணைந்து நடத்திய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ஆளுமைத் திறன் பயிற்சி விழிப்புணர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதனை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது. மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவிகள் விடாமுயற்சி எடுத்து தங்களின் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.