ஆலந்தூர்: கிண்டியில் இருந்து போரூர் வரை செல்லும் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு நலன் கருதியும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 121 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, நந்தம்பாக்கம் காவல் நிலையம் எதிரேயுள்ள மைதானத்தில் நேற்று நடந்தது. கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமை வகித்தார். இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் பிரபாகரன், நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு, புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை இயங்கி வைத்தார்.