குவைத் நாட்டில் வேலைவாய்ப்பு சென்னையில் 3ம் தேதி நேர்காணல்

சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு:

குவைத் நாட்டில் பணிபுரிய 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது இசிஎன்ஆர் பாஸ்போர்ட் உள்ள 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட அரபு நாட்டு ஒட்டுநர் உரிமம் பெற்ற இலகுரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் சமையலர்கள், அரபு உணவு வகைகள் தயாரிப்பவர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். ஓட்டுநருக்கு மாத ஊதியம் ரூ.25,000 முதல் ரூ.32000 வரை, சமையலருக்கு மாத ஊதியம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை மற்றும் இருப்பிடம், விமான பயணச்சீட்டு, மருத்துவச்சலுகை குவைத் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும். மேலும் 31வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட வீட்டு வேலை செய்யும் பெண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

மாத ஊதியம் ரூ.25,000 முதல் ரூ.28000 வரை மற்றும் உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு, மருத்துவச்சலுகை  குவைத் நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்த பணிக்காலியிடத்திற்கான நேர்காணல் வருகிற 3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தங்களின் கல்வி தகுதி, அனுபவச்சான்றிதழ், புகைப்படம், பாஸ்போர்ட், அசல் மற்றும் நகல்கள் ஆகியவற்றுடன் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், எண்.42. ஆலந்தூர் சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை- 32. அலுவலகத்திற்கு 3ம் தேதி காலை 9 மணிக்கு நேரடியாக வர வேண்டும். மேலும் வளைதளம் மூலமாக www.omcmanpower.com மற்றும் 044-22505886, 22502267, 9566239685 என்ற தொலைபேசி எண்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: