முசிறியில் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, ஜன.29: முசிறியில் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.1ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.1ம் தேதி முசிறி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான வேலைநாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு பணி என்ற தமிழ்நாடு அரசு சார்பு நிறுவனம் (ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேஷன், சென்னை) கலந்துகொண்டு வேலைநாடுனர்களுக்கு அயல் நாட்டுப்பணிகளை பெற்றுத்தருவது தொடர்பில் பதிவுப்பணிகளை மேற்கொள்ளவுள்ளது. அயல் நாட்டு வேலைவாய்ப்பு பணி விவரங்கள் அட்டவணையிடப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருச்சி கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: