துறையூர் அருகே திருவெறும்பூரில் பலாத்காரத்தால் பெண் கர்ப்பம்

திருவெறும்பூர், ஜன.29: திருச்சி மணிகண்டத்தை சேர்ந்தவர்கள் கார்த்தி, சதீஷ். திருவெறும்பூர் குமரேசபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 8 மாதங்களுக்கு முன் மணிகண்டத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது தனியாக நடந்து சென்ற அவரை கார்த்தியும், சதீசும் முட்புதருக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்தனர். இதை அந்த பெண் வெளியில் சொல்லவில்லை.

இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் வயிறு வீங்க துவங்கியது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது அந்த பெண் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அப்போதுதான் நடந்த விவரத்தை அந்த பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  இது பற்றி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து கார்த்தி, சதீஷை தேடி வருகின்றனர்.

Related Stories: