திருச்சி, ஜன. 29: திருச்சியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர். ஓட்டலில் சென்னையை சேர்ந்தவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருச்சி எ.புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்தவர் ஞானசேகர்(35), சென்ட்ரிங் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர், சம்பாதிக்கும் பணத்தை தினமும் குடித்துவிட்டு வந்தார். நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்ததால் மனைவி ஜெயந்தி திட்டினார். இதனால் மனமுடைந்த ஞானசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி எ.புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். பிஸ்கட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜமுனாராணி(20). 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 23ம் தேதி ஜமுனாராணி எலிபேஸ்ட் தின்றார். அவரை உறவினர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார். இதுகுறித்து கோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர். குடும்பத்தகராறில் அவர் தற்கொலை செய்தாரா அல்லது வரதட்சணை கொடுமையா என உதவி கமிஷனர் அஜித் விசாரித்து வருகிறார். ஜமுனாராணிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.