முத்துப்பேட்டை, ஜன.29: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் படித்து பல்வேறு பாராட்டுக்களை பெற்றுள்ளனர். அதேபோல் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு சிறப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் கல்வியில் ஆர்வத்துடன் இருக்கும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பல்வேறு கல்வி சார்ந்த உதவிகளை செய்து வருகின்றனர்.