தொடக்கப்பள்ளிகளுக்கு அடிப்படை வசதி

திருத்துறைப்பூண்டி, ஜன.29: தொடக்கப்பள்ளிகளுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என ஆசிரியர்கூட்டணி ஒன்றியக்குழு தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பாஸ்கரை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சந்தித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள சாத்தங்குடி, வடக்குவீதி, கச்சனம் , எழிலூர் ஆகிய பள்ளிகளுக்கு கட்டிடம், சுற்றுச்சுவர் வசதி செய்து கொடுக்கவும் மேலும் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க ஒன்றிய குழு தலைவர் யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் சுபாஷ, வட்டாரத்தலைவர் செல்வமணி, செயலாளர் அரிகிருஷ்ணன், முன்னால் செயலாளர் வேதரத்தினம். தலைமைஆசிரியர் வேதரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: