திருவாரூர், ஜன. 29: குடியரசு தினத்தன்று பணிபுரிந்த பணியாளர்களுக்கு விடுமுறையோ, இரட் டிப்பு சம்பளமோ வழங்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட உதவி ஆணை யர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மாநில தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் உத்தரவின் பேரில், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்ரமணியன் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் எனது தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்கள் அடங்கிய குழு குடியரசு தினத்தன்று திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 163 நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டது.