பிப்ரவரி 12ம் தேதி சிறுபான்மையினர் குழு திருவள்ளூர் வருகை: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஜன. 29: மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழு, பிப்ரவரி 12ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரன், துணைத் தலைவர் ஜவஹர் அலி மற்றும் ஆணையக் குழு உறுப்பினர்கள், பிப்ரவரி 12ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு வர உள்ளனர். சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை, அன்றைய தினம் காலை 11 மணியளவில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து, ஆலோசனை நடத்த உள்ளனர். அந்த சமயம் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள், மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து, தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: