ஊத்துக்கோட்டை, ஜன. 29: பெரியபாளையத்தில் போலி மது பானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரசாரம் நடைபெற்றது. பெரியபாளையம் மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறை சார்பில் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் அருந்தக்கூடாது என்பதை வலியுறுத்தி பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகம் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் மற்றும் மது விலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி கல்பனாதத் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.