தா.பழூர், ஜன. 29: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவரை மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்தனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒருவர் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அணைக்குடம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை வேலா கருணை இல்லத்தை சேர்ந்த விமலாதேவி என்பவரால் மீட்கப்பட்டு தா.பழூர் காவல் நிலையம் சென்று தகவல் தெரிவித்தார். பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டவரை கருணை இல்லம் அழைத்து சென்றனர்.