திருவள்ளூர், ஜன. 29: திருட்டு பைக்குகளில்சென்று வழிப்பறி செய்பவர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பட்டப்பகலில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன், திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி விஜயா(55) என்பவரிடம், பைக்கில் சென்றவர்கள் 7 சவரன் செயினை பறித்து தப்பினர். இதுபோன்று மாவட்ட அளவில் நடக்கும் பெரும்பாலான செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் கும்பல், பைக்குகளை திருடி செல்லும் வழியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை மறித்து செயின் பறிப்பில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.