சீர்காழி, ஜன.29: சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. சீர்காழி எம்எல்ஏ பாரதி தலைமை வகித்தார் டிஆர்ஓ இந்துமதி, மயிலாடுதுறை ஆர்டிஓ மகாராணி முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் வரவேற்றார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் சீர்காழி கொள்ளிடம் ஒன்றியங்களைச் சேர்ந்த 13 பள்ளிகளை சேர்ந்த 2008 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசுகையில், மாணவ மாணவிகள் தாங்கள் விரும்பிய பாடத்தைை படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். விருப்பமில்லாத பாடங்களை படிக்க கூடாது.