நாகை, ஜன.29: வேளாங்கண்ணி பேராலய நிர்வாகத்தை கண்டித்து தலித் கிறிஸ்தவர்கள் விடுதலை இயக்கம் சார்பில் வேளாங்கண்ணியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கத்தோலிக்க திருச்சபையில் சுமார் 65 சதவீதமும், தமிழ்நாடு - பாண்டிச்சேரி கத்தோலிக்க திருச்சபையில் சுமார் 75 சதவீதம் தலித் மக்கள் இருந்தும், தலித் ஆயர்கள் சுமார் 10 சதவீதம் மட்டுமே உள்ளனர். எனவே தலித் கத்தோலிக்க மக்கள் தொகைக்கு ஏற்ப தலித் ஆயர்களை நியமிக்க வேண்டும். வேளாங்கண்ணியில் தலித் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டமான அந்தோணியப்பன் கல்லறை தோட்டத்தை கையகப்படுத்தி, வேறு இடத்திற்கு மாற்ற அரசு நிர்வாகத்திற்கு மறைமுகமாகவும், சாதி கிறிஸ்தவர்களுக்கு நேரடியாகவும் துணைப் போகும் பேராலய நிர்வாகத்தை கண்டிக்கிறோம்.