டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

வேதாரண்யம், ஜன.29: வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல் சரகம் தாணிக்கோட்டகம் பிச்சக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் கோதண்டபாணி.

இவரது மகன் கந்தபாண்டியன் (36). இவர் சென்னையில் தனியாக தொழில் செய்து வருகிறார். சொந்த ஊர் வந்திருந்த அவர் சம்பவத்தன்றுதன் டூவீலரில் மருதூர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். மருதூர் தெற்கு பிள்ளையாரடி அருகே வந்தபோது, மெயின்ரோட்டில் நடந்து சென்ற பூவதேவன்காடு கணேசன் என்பவர் மீது மோதி நிலை தடுமாறி கந்தபாண்டியன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தபாண்டியன் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த கணேசன், வேதாரண்யம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாய்மேடு இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: