கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவில்லிபுத்தூர், ஜன. 29:  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா பல்கலையில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு கலசலிங்கம் பல்கலைக்கழக துணைத் தலைவர் சசிஆனந்த் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சந்திரா ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரவி கலந்துகொண்டு பிகாம், பிஏ, பிஎஸ்சி, பிசிஏ, எம்காம், மாணவர்கள் மொத்தம் 420 பேருக்கு பட்டங்களையும், பல்கலை அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 17 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.  

நிகழ்ச்சியில் பெற்றோர் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: