விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிவகாசி, ஜன. 29: தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் காப்பீட்டு தொகை கணக்கெடுப்பை சரிவர நடத்தாத  புள்ளியியல் துறையின் தவறான நடவடிக்கையை கண்டித்து வெம்பக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் விவசாய சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க அமைப்பாளர் காளிராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட வேளாண்மை துறை, மாவட்ட புள்ளியியல் துறையின் தவறான கணக்கெடுப்பை கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: