கூலித் தொழிலாளி கொலை வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டு ஜெயில்

திருவில்லிபுத்தூர், ஜன. 29: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் ஊரைச் சேர்ந்தவர் குருசாமி என்ற பஞ்சு குருவன் (60). இவருக்கும் இவரது தம்பி மும்மூர்த்திக்கும் (50) இடப்பிரச்சினை தொடர்பாக கடந்த 14.1.2017 அன்று தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கூலித்தொழிலாளி செல்வம் தகராறை விலக்கி விட்டுள்ளார். அப்போது குருசாமி, செல்வத்தையும் அவரது தம்பி மூர்த்தியையும் கத்தியால் குத்தியதில் செல்வம் மட்டும் இறந்தார்.

இது தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள தீண்டாமை ஒழிப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சுமதிசாய்பிரியா செல்வத்தை கொலை செய்த குருசாமிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories: