அதிகாரிகள் அதிரடி கேளை ஆடு முட்டி பெண் படுகாயம்

மூணாறு, ஜன.29: மூணாறு அருகில் அமைந்துள்ளது பூப்பாறை. இங்கு ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருபவர் முருகம்மா(48). இவர் நேற்று காலை ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது காட்டில் இருந்து இறங்கிய கேளை ஆடு முருகம்மாவை முட்டியது. இதில் நிலைகுலைந்து விழுந்த இவரை சக தொழிலாளர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், கேளை ஆடு சாதுவான உயிரினம் ஆகும். அது யாரையும் துன்புறுத்துவது இல்லை. பின்னால் இருந்து கேளை ஆடு வந்ததை தொழிலாளர்கள் கவனிக்காத காரணத்தால் இந்த சம்பவம் நடைபெற்றது என்றனர்.

Related Stories: