விஷம் குடித்த மாணவி சாவு

திருப்புவனம், ஜன.29: திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் முத்துராஜா. இவரது மகள் முத்துலெட்சுமி, அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். .நேற்று முன்தினம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனை அறிந்த முத்துராஜா மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் வழியிலேயே மாணவி முத்துலெட்சுமி இறந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. திருப்பாச்சேத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: