பெண் கொடுக்காத பிரச்சனையில் மூதாட்டி அடித்துக் கொலை தந்தை, மகன் கைது

உசிலம்பட்டி, ஜன. 28: பெண் கொடுக்காத ஆத்திரத்தில் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். எழுமலை அருகே உள்ள துள்ளுக்குட்டிநாயக்கனூரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி அங்கம்மாள் (65). இவர், தனது பேத்தியை பெண் கொடுக்காததால், அதே ஊரைச் சேர்ந்த உறவினரான ராமர் (55), அவரது மனைவி பொன்மாரி (45), அவர்களது மகன் சதீஷ் (25) ஆகியோரிடம் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி ராமர், பொன்மாரி, சதீஷ் ஆகியோர் சேர்ந்து கடைக்குச் சென்ற அங்கம்மாளை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அங்கம்மாளை உசிலம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அங்கம்மாள் இறந்தார். இது குறித்து சின்னச்சாமி கொடுத்த புகாரின்பேரில் எம்.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து ராமர் மற்றும் சதீஷை கைது செய்தனர்; தலைமறைவான பொன்மாரியை தேடி வருகின்றனர்.

Related Stories: