பழநியில் நாளை மின்தடை

பழநி, ஜன. 29: பழநி நகர், சிந்தலவாடம்பட்டி மற்றும் பாப்பம்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (ஜன.30ம் தேதி வியாழன்) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை பழநி நகர், பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, அ.கலையம்புத்தூர், சின்னக்கலையம்புத்தூர், சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டிணம்புதூர், பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், தாதநாயக்கன்பட்டி, கரட்டிகூட்டம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories: