திண்டுக்கல், ஜன. 29: திண்டுக்கல் மாவட்டத்தில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30ம் தேதியன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெறவுள்ளது.அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர். எனவே அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.