நிலக்கோட்டை அருகே தேசிய பெண் குழந்தைகள் தினம்

வத்தலக்குண்டு, ஜன. 29: நிலக்கோட்டை அருகே கொழிஞ்சிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் சோமசுந்தரம் தலைமை வகிக்க, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சேதுராமன் முன்னிலை வகித்தார். சைல்டு வாய்ஸ் நிர்வாக அறங்காவலர் அண்ணாதுரை பெண் குழந்தைகள் விழிப்புணர்வு பற்றி பேசினார். திட்ட மேலாளர் விக்னேஷ் பெண் குழந்தைகளின் பெருமைகள் குறித்து பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சைல்டு வாய்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: