பழநியில் மாநில இறகுப்பந்து போட்டி

பழநி, ஜன. 29: பழநியில் நடந்ந மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழநியில் பீனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் திருஞானசம்பந்தம் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். திண்டுக்கல், கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 11 வயதிற்குட்பட்டோர், 13 வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு டிஎஸ்பி விவேகானந்தன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஆனந்தன் உள்ளிட்டோர் பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கினர்.

Related Stories: