இக்னோ பட்டமளிப்பு விழா

திருவனந்தபுரம், ஜன. 29: இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக (இக்னோ) 33வது பட்டமளிப்பு விழா வரும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெறுகிறது. டெல்லியில் பட்டமளிப்பு விழா நடைபெறும் அதே நாளில் நாடு முழுவதும் உள்ள இக்னோவின் 39 மையங்களிலும் விழா நடைபெறும். திருவனந்தபுரம் மையத்தில் 1500 பேர் பட்டம் பெற தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் ரூ.600 செலுத்தி பிப்ரவரி 10ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். rctrivandrum@ignou.ac.in < mailto:rctrivandrum@ignou.ac.in > என்ற இணையதளத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: