விவேக் ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம்

நாகர்கோவில், ஜன. 29: நாகர்கோவில் விவேக் ரத்த வங்கியும், கேப் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் கேப் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதுபோல் விவேக் ரத்த வங்கி, புனித ஹெலன்ஸ் இளைஞர் இயக்கம், இனயம் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் இனயத்தில் நடந்தது. இந்த முகாம்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர். இம்முகாம்

களில் விவேக் ரத்த வங்கி சார்பில் ரத்த தானத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு ரத்ததானம் வழங்கிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: