குளச்சல், ஜன.29: குளச்சல் அருகே பாலப்பள்ளம் மேலவிளைவீடு பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் மெர்லின் மெரிஸ்(28).கால் டாக்ஸி வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பைக்கில் குளச்சல் வந்துவிட்டு மீண்டும் பாலப்பள்ளம் நோக்கி சென்று ெகாண்டிருந்தார். ஒற்றப்பனைவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு மனோஜ் என்பவர் சாலையோரம் எம்.சாண்ட் இறக்கி அதைச்சுற்றி பாதுகாப்பாக கருங்கற்களை வைத்திருந்தார். இருட்டில் இது தெரியாமல் மெர்லின் மெரிஸ் பைக் அந்த கல்லில் மோதியது. இதில் நிலைதடுமாறிய அவர் சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியது. அதைத் தொடர்ந்து அந்த பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ெமர்லின் மெரிஸ் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினர். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர் ராஜசரோன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் ெமர்லின் மெரிஸ் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் இறந்த மெர்லின் மெரிசுக்கு 10 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இவரது மனைவி சஜிதா 9 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் மெர்லின் மெரிஸ் விபத்தில் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.