பைக்குகள் மோதி 2 பேர் காயம்

தக்கலை: பொற்றையடி  அருகே உள்ள கரும்பாட்டூரை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி புனிதா(29).  அழகேசன் தனது மனைவியுடன் பைக்கில் தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.  தக்கலை அருகே புலியூர்க்குறிச்சி பகுதியில் வந்தபோது, எதிரே மீனச்சல்  பகுதியை சேர்ந்த கிருஷ்ணகாந்த் என்பவர் ஓட்டி வந்த பைக் இவர்கள் மீது  மோதியது. இதில் புனிதா, கிருஷ்ணகாந்த் ஆகியோர் காயமடைந்தனர். புனிதா  நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், கிருஷ்ணகுமார்  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும்  அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்த புகாரின் பேரில் கிருஷ்ணகுமார் மீது  தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: