கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது

வந்தவாசி, ஜன.29: வந்தவாசி அருகே கஞ்சா விற்ற அண்ணன், தம்பி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதிக்கு கஸ்தூரிபாய் தெருவில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் கடந்த 26ம் தேதி இரவு அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த 2பேர், போலீசாரை பார்த்தவுடன் கையில் இருந்த பையை வீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், விரட்டி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் வெண்குன்றம் பக்கீர் தர்கா பகுதியை சேர்ந்த இஸ்மாயில்(57), இவரது அண்ணன் பொட்டிநாயுடு தெருவைச் சேர்ந்த மகபூப் பாஷா(64) என்பதும், அவர்கள் வீசி சென்ற பையில் ஒரு கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இஸ்மாயில், மகபூப் பாஷா இருவரையும் கைது செய்தனர். பின்னர், நேற்று முன்தினம் வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: