கண்ணமங்கலம், ஜன.29: கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் அரசு குறைகேட்பு முகாமில் ஆரணி தாசில்தார் மனுக்களை பெற்றுக்கொண்டார். கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரேணு தலைமை தாங்கினார். கவுன்சிலர் கவிதாகாமராஜ், துணைத்தலைவர் சுதாகர், வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் வழக்கறிஞர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சுபிச்சந்தர் வரவேற்றார்.