கடம்பூர் அரசு பள்ளியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி, ஜன.26: கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்தார். வாக்காளர் தின உறுதிமொழியை, கிராம நிர்வாக அலுவலர் துரை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை, பள்ளி மேலாண்மை குழுவை சேர்ந்த மீனாம்பிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பொதுமக்களை சந்தித்து வாக்காளர் தினம் பற்றியும், அதன் நோக்கங்கள் பற்றியும், தேர்தல் ஆணையம் பற்றியும் எடுத்து கூறினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: