காங்., சார்பில் கிரிக்கெட் போட்டி நாமக்கல் மாவட்ட அணி வெற்றி

பள்ளிபாளையம், ஜன.29: காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கிரிக்கெட் போட்டியில் நாமக்கல் மாவட்ட அணி வெற்றி பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், என்எஸ் கிரிக்கெட் அகாடமி மற்றும் ஜெயம் ஸ்போர்ட்ஸ் ஆகியவை இணைந்து கிரிக்கெட் போட்டியை நடத்தியது. என்எஸ் அகாடமி சுரேஷ் வரவேற்றார். வட்டார காங்கிரஸ் தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார். நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 6 அணியினர் போட்டியில் பங்கேற்று விளையாடினர். 25 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் கொண்ட இரு பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கோவை, நாமக்கல் அணிகள் மோதின. இதில், நாமக்கல் மாவட்ட அணியினர் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச்சென்றனர். சந்தோஷ், யஷ்வந்த் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஈரோடு அணியியும் -நாமக்கல் அணியும் மோதின. இதில் நாமக்கல் அணியினர் வெற்றி பெற்றனர். கீர்த்தி, ஜோதீஸ் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றனர்.

பரிசளிப்பு விழாவில் குமாரபாளையம் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஜானகிராமன், பொருளாளர் சிவராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் தங்கராஜ், நிர்வாகிகள் சக்திவேல், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அகாடமி நிர்வாகி மதியரசு நன்றி கூறினார்.

Related Stories: